بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: செப்டம்பர் 2011


வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

>> வியாழன், 29 செப்டம்பர், 2011


பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, ஒவ்வொரு மாநில தேர்தல் ஆணையமும், 'வாக்காளர் பட்டியல்களை', இணையத்தில் பதிப்பித்திருக்கின்றன. உங்களுடைய மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் தேட முடியும்

வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயரை தேடுவதற்கு உங்களுடைய மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்

ஆந்திர பிரதேசம்

அருணாச்சல பிரதேசம்

அசாம்

பீகார்

சண்டிகார்

சத்தீஸ்கர்

தாத்ரா & நாகர் ஹவேலி

தில்லி

கோவா

குஜராத்

ஹரியானா

ஹிமாச்சல பிரதேசம்

ஜம்மு காஷ்மீர்

ஜார்க்கண்ட்

கர்நாடகா

கேரளா

லட்சத்தீவுகள்

மத்திய பிரதேசம்

மகாராஷ்டிரா

மணிப்பூர்

மேகாலயா

மிசோரம்

நாகாலாந்து

ஒரிசா

புதுச்சேரி

பஞ்சாப்

ராஜஸ்தான்

சிக்கிம்

தமிழ்நாடு

திரிபுரா

உத்தரகாண்ட்

உத்திர பிரதேசம்

மேற்கு வங்காளம்

 

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம்

  • ஜனவரி 01, 2010 அன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடைந்திருந்தால், தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு ஒருவர் விண்ணப்பிக்க முடியும்.
  • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6 பயன்படுத்தவேண்டும்.
  • படிவம்- 6 டன், 2 வண்ணப் புகைப்படம் அல்லது கருப்பு வெள்ளை புகைப்படம் இணைக்கவேண்டும்.
  • பிறப்பு சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும் (அதாவது மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ் அல்லது மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்)
  • விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி / அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் / வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் / தொலைபேசி / மின்சாரம் / எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.

பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம்

  • வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம், அல்லது தவறுதலான பதிவு செய்யப்பட்டிருந்தால், ஒருவர் பெயர் நீக்கத்திற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கமுடியும்.
  • இதற்காக, படிவம்-7 – ஐ பயன்படுத்தவேண்டும்.

பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம்

  • உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் (எபிக்) அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எ.கா - பெயரில், வயதில் அல்லது தகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
  • தவறான பதிவின் திருத்தத்திற்க்கு படிவம்-8 –ஐ பயன்படுத்துங்கள்
  • அடையாளச் சான்றாக பிறப்பு சான்றிதழின் நகலை சமர்பிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பதிவின் இடமாற்றத்திற்க்கான விண்ணப்பம்

  • வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும்.
  • இதற்காக படிவம்-8A வை பயன்படுத்தவேண்டும்.
  • விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி / அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் / வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் / தொலைபேசி / மின்சாரம் / எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள்

விண்ணப்பத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்

நகராட்சி பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க:

  • துணை ஆணையர் அலுவலகம் ( நகராட்சி அலுவலகம் )
  • அஞ்சல் அலுவலகங்கள்
  • வணிக வளாகங்களில் அமைந்திருக்கும் இடுபெட்டிகள்.
  • பெட்ரோல் விற்பனை நிலையங்கள்

நகராட்சி எல்லைக்கு நீங்கள் வசிப்பவராக இருந்தால், உங்களுடைய மாவட்டங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க

  • துணை ஆட்சியரின் அலுவலகம்
  • வருவாய் டிவிசன் அலுவலரின் அலுவலகம் (வாக்காளர் பதிவு அலுவலர்)
  • வட்டாட்சியர் அலுவலகம் ( துணை வாக்காளர் பதிவு அலுவலர் )

 

Read more...

RSS-ன் கைக்கூலி என தன்னை மீண்டும் நிருபித்த அன்னா ஹசாரே

>> செவ்வாய், 27 செப்டம்பர், 2011


2008 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஓட்டெடுப்பு நடைபெற்றது. அரசுக்குஆதரவாக வாக்களிக்க சில எம்பிக்கள் லஞ்சம் வாங்கினர். இது இப்போது பூதாகரமாகி அமர்சிங் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத நாடகம் நடத்திய அன்னா ஹசாரே, போராட்டமெல்லாம் முடித்து சொந்த ஊரில்ஓய்வெடுத்தவர், திடீரென கிளம்பினார். "காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்ற லஞ்சம் வாங்கியவர்களை தூக்கிலிடவேண்டும் " என அதிரடியார் அறிக்கைவிட்டார். ஆனால் அமர்சிங் கைதான அதே வாரத்தில் பல ஆயிரம் கோடி சுரங்கஊழல் வழக்கில் கைதான பீஜேபியின் ரெட்டியை பற்றி வாயை கூட திறக்கவில்லை.
காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்ற எம்பிகள் வாங்கிய லஞ்சமோ சில கோடிகள். அதைவிட பல ஆயிரம் கோடி மடங்குசுரங்க ஊழலில் ஈடுபட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய்களை கொள்ளை அடித்த பீஜேபியின் ரெட்டியை தூக்கில் போடவேண்டும் என ஏன் அன்னா ஹசாரே சொல்லவில்லை , குறைந்த பட்சம் அவர்களுக்கு எதிராக கண்டனம் கூடதெரிவிக்கவில்லை. ஒரே வாரத்தில் ஊழலுக்கு எதிரான இரண்டு கைது சம்பவங்களில் காங்கிரஸ் ஆட்சியைகாப்பாற்றியவர்களை தூக்கிலிட வேண்டும் என கூறிவிட்டு, மற்றொறு சம்பவத்தில் ஊழல் செய்தவர் பீஜேபியைசேர்ந்தவர் என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டதில் இருந்தே தெரிகின்றது இவரின் சங்பரிவார முகம். ஊழல் ஊழல் எனபோலி நாடகம் ஆடிய அன்னா ஹசரே பீஜேபியின் மெகா ஊழல்களை பற்றி வாயே திறக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியை மட்டுமே குறிவைத்து குற்றம் சாட்டிய இந்த அன்னா ஹசாரே ஸ்பெக்ட்ரத்தைவிட அதிக அளவுஊழல் நடைபெற்ற பீஜேபியின் சுரங்க ஊழலை பற்றி வாயை திறக்கமாட்டேன் என்கிறார். காங்கிரஸ் கட்சி ஊழல்என்றதும் சொந்த ஊரில் ஓய்வெடுத்து கொண்டு இருந்தாலும் ஓடிவந்து தூக்கிலிட வேண்டும் என்கின்றார். கர்நாடகஉயர்நீதி மன்றமும், இந்திய உச்சநீதி மன்றமும் , பெல்லாரியில் கனிம ஏற்று மதிக்கு தடைவிதித்ருந்தும் பீஜேபியின்ரெட்டிகளின் கொள்ளை நின்ற பாடில்லை. நாட்டின் எந்த சட்ட அமைப்புகளையும் சட்டைபன்னாமல் தொடர்ந்து கனிமவளங்களை கொள்ளை அடித்துகொண்டு இருந்தனர் இந்த பீஜேபியின் ரெட்டி சகோதரர்கள். இவர்களுக்கு எதிராக ஒருசிறு கண்டனமும் தெரிவிக்கவில்லை.
சில கோடி ஊழல் செய்தவனை தூக்கில் போட வேண்டுமாம், பல்லாயிரம் கோடி ஊழலில் ஈடுப்பட்டவர்கள் பீஜேபியினர்என்பதால் அவர்களுக்கு எதிராக ஒன்றும் செய்யக்கூடாதாம். இதிலிருந்து இவர் ஊழலுக்கு எதிராக போராடவில்லை, மீண்டும் சங்பரிவார ஆட்சியை இந்தியாவில் கொண்டுவர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டத்தைசெயல்படுத்துகின்றார்.
லோக்பால் வரம்பிற்ற்குள் பிரதமரை கொண்டுவர வேண்டும் பீஜேபியை கொண்டு வரக்கூடாது
ஏற்கனவே குஜராத் விஷயத்தில் தன்னை ஒரு சங்பரிவார ஆதவாளர் என நிறுபித்தார். ஒவ்வொறு மாநிலத்திலும் லோக்பால் போன்று ஊழலை ஒழிக்க லோக் ஆயுத்தா நியமிக்க வேண்டும் என்பது இவரின் முக்கிய கோரிக்கை, இதை ஏற்று மத்திய அரசு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடியின் ஊழலை வெளிகொண்டுவர, 6 ஆண்டுகளால மோடியால் முடைக்கிவைக்கப்பட்டிருந்த லோக் ஆயுத்தாவிற்க்கு நீதிபதியை நியமனம் செய்தது. இதை எதிர்த்து அத்வானி தலைமையில் நாடாளுமன்றத்தில் பெரும் போராட்டம் நடத்தி நாடாளுமன்றத்தையே முடங்க செய்தனர். ஊழலை ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட லோக் ஆயுத்தாவை உடனே குஜதாத்தில் இருந்து நீக்க வேண்டும் என போர் கொடி உயர்த்தினர் பீஜேபியினர். ஆனால் இதை எதிர்த்து அன்னா ஹசாரே ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. இதில் இருந்து அன்னா ஹசாரே சொல்லவருவது பீஜேபியினர் எவ்வளவு ஊழல் வேண்டுமானாலும் செய்யலாம் இந்த லோக்பால், லோக் ஆயுத்தாவெல்லாம் பீஜேபிக்கு கிடையாது. ஆக லோக்பால் வரம்பிற்க்குள் பிரதமர் இருக்க வேண்டும் ஆனால் பீஜேபி இருக்க கூடாது இதுதான் அன்னா ஹசாரே நிலைபாடு. குஜராத் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவு போக்கை காட்டியவர் இப்போது கார்நாடகா பீஜேபியின் ரெட்டி விஷயத்திலும் தான் சங்பரிவாரா கைகூலி என்பதை மீண்டும் நிறுபித்துள்ளார். அன்னா ஹசாரே போன்ற ஆர்.எஸ்.எஸ் கைகூலிகளின் உண்மை முகத்தை அறிந்து சங்பரிவார சதிதிட்டத்தைமுறியடிக்க வேண்டும்
S.சித்தீக்.M.Tech

Read more...

கீழக்கரை நகர மன்றத் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர்

>> வியாழன், 22 செப்டம்பர், 2011

நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில், கீழக்கரை நகர மன்றத் தலைவர் பதவிக்கு,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தாஜு நிசா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Read more...

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு க்ழகம் வேண்டுகோள்

>> செவ்வாய், 20 செப்டம்பர், 2011



 

\

Read more...

கீழக்கரை நகர மன்றத் தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர்

>> திங்கள், 19 செப்டம்பர், 2011

நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில், கீழக்கரை நகர மன்றத் தலைவர் பதவிக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் எஸ். ராபியத்துல் கதிரியா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Read more...

கீழக்கரை நகராட்சி தலைவர் ப‌த‌வி மகளிருக்கு ஒதுக்கீடு !

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நகர்மன்றங்களில் கீழக்கரைக்கான‌ தலைமை பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

மாவட்டங்கள் வாரியான விபரம் வருமாறு (பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சிகள்)


ராமநாதபுரம் மாவட்டம்

கீழக்கரை

திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம்
கடையநல்லூர்
தென்காசி
விகிரமசிங்கபுரம்

தூத்துக்குடி மாவட்டம்
காயல்பட்டினம்
கோவில்பட்டி


நாகை மாவட்டம்
வேதாரண்யம்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை

திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி
ஆரணி

விருதுநகர் மாவட்டம்
சாத்தூர்
விருதுநகர்
திருவில்லிபுத்தூர்
திருத்தங்கள்

கன்னியாகுமரி மாவட்டம்
குழித்துறை
நாகர்கோயில்
பத்மநாபபுரம்

திருப்பூர் மாவட்டம்
உடுமலைப்பேட்டை
தாராபுரம்

சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை
காரைக்குடி

கடலூர் மாவட்டம்
சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி

ஈரோடு மாவட்டம்
கோபிசெட்டிப்பாளையம்

வேலூர் மாவட்டம்
ஆம்பூர்

ஜோலார்பேட்டை
குடியாத்தம்

தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர்
கும்பகோணம்

அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டான்

திருவண்ணாமலை மாவட்டம்
திருவாதிபுரம்

திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி

திருச்சி மாவட்டம்
மணப்பாறை

Read more...

பான் கார்டு வாங்குவது பிரச்சினையா?

>> ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

பான் கார்டு வாங்குவது பிரச்சினையா?
பி. முரளிதரன்

வீட்டு மனை வாங்குவது, பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவது, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் வங்கி டெபாசிட்டுகளில் முதலீடு செய்வது எல்லாவற்றும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு ( PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலை.

இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினைக்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர்.

மேலும், இந்தக் கார்டை வாங்கினால் கட்டாயம் வருமான வரி செலுத்த வேண்டியிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களுக்குக் விடைகாணும் பொருட்டு, பான்கார்டை வழங்குவதற்காக, மத்திய வருமான வரித்துறையின் அங்கீகாரம் பெற்ற யூ.டி.ஐ.டெக்னாலஜி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் பாபுவைச் சந்தித்துப் பேசினோம்.

""
மத்திய அரசு 200 77 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக்கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியுள்ளது. பத்து இலக்க எண்ணைக் கொண்டது இந்த பான் கார்டு.

பான் கார்டு வாங்கினால் அரசுக்கு ஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும் என்று பயப்படுகின்றனர். உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமான வரம்புக்குள் கொண்டு வருவதற்காகவே இந்த பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் டிமேட் கணக்கு வைத்திருப்பது அவசியமாகிவிட்டது. இந்த டிமேட் கணக்கைத் துவங்க பான் கார்டு அவசியமாக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரூ. 25,000-க்கும் அதிகமான தொகையில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் போதும், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அங்கு ஓட்டலில் தங்கும் போது ஓட்டல் பில் மேற்கண்ட தொகைக்கு மேல் செலுத்தும் போதும் பான்கார்டு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதேபோல், வங்கி மற்றும் தபால் நிலையங்களில் ரூ.50,000 மற்றும் அதற்கும் மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்யும் போது பான்கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும் போதுதான் பான்கார்டு அவசியமிருந்தது. ஆனால், தற்போது எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும். மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.

பான் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. எங்களுடைய அலுவலகம் மூலம் பான் கார்டு வழங்கப்படுகிறது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சேவை மையங்களை (சர்வீஸ் சென்டர்திறந்துள்ளோம். அங்கு சென்று அணுகினால், இந்தக் கார்டைப் பெறுவதற்கான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்.
பான்கார்டு பெற விரும்புவோர் 49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான்றிதழை இணைக்க வேண்டும். டெலிபோன், மின்சார ரசீது, கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட கடிதம், வாடகைக் கட்டண ரசீது அல்லது எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் போன்ற இவற்றில் ஏதாவது ஒன்றை படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றையும் இணைத்தல் வேண்டும். மைனர்கள் பெயரில் விண்ணப்பிக்கும் போது அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களது பெயரில் உள்ள இதேபோல் ஏதாவது சான்றிதழை விண்ணப்பத்துடன் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல், திருமணமான பெண்கள் தங்களது பெயரில் விண்ணப்பிக்கும் போது, கட்டாயம் தங்களது தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

இதேபோல், பான் கார்டு பெறுவதற்காக ரூ.60 கட்டணமாகவும், சேவைக் கட்டணமாக ரூ.7-ம் சேர்த்து மொத்தம் ரூ.67 மட்டுமே செலுத்த வேண்டும். ஆனால், சிலர் இந்த பான்கார்டை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.500 வரை கூட பணம் வசூலிப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற, ஆட்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும், விண்ணப்பித்த பத்து வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு பான் கார்டு அனுப்பி வைக்கப்படும்.

சிலர் பான் கார்டு வாங்குவதை ஒரு மிகப் பெரிய வேலையாகக் கருதி, சில ஏஜென்ட்களிடம் அளவுக்கு அதிகமாகப் பணம் கொடுத்து ஏமாறுகின்றனர். ஒரு சிலர் பான்கார்டு வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக் கொண்டு கார்டை வாங்கித் தராமல் ஏமாற்றும் சில செயல்களும் ஆங்காங்கே நடக்கின்றன. எனவே, முடிந்த அளவுக்கு நாமே அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிப்பது நல்லது.

இதேபோல், ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கின்றனர். இதுவும் சட்டப்படி குற்றமாகும். இதுபோல், ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளை வைத்திருந்தால் அவற்றை சரண்டர் செய்ய வேண்டும். இதேபோல், பான்கார்டு வைத்துக் கொண்டு ஏதாவது மோசடி செயல்களில் ஈடுபட்டாலும், அவர்கள் சட்டப்படி தண்டனைக்குள்ளாவார்கள்.

"
ஆன்-லைன்' மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். www.pancard.utitsl.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். "ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கும் போது, ஃபோட்டோ மற்றும் கட்டணம் ஆகியவற்றைத் தனியாக எங்கள் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மத்திய வருமான வரித்துறை அலுவலகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்கப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமினேட் கார்டை பெற வேண்டும் என விரும்பினால் மட்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும் போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதேபோல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றாலோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

இனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. எனவே, அதை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்'' என்றார்.
 

Courtesy: Dinamanikadir

 

Read more...

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

Back to TOP