بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: 2008


மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் மொசாத்-ஆர்.எஸ்.எஸ் - அமரேஷ் மிஸ்ரா

>> திங்கள், 1 டிசம்பர், 2008

மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் மொசாத்-ஆர்.எஸ்.எஸ் - அமரேஷ் மிஸ்ரா


சனி, 29 நவம்பர் 2008

பயங்கரவாதத்தில் கூட்டணி?இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சியடைய வைத்த மும்பை தீவிரவாதத் தாக்குதலை இந்திய இராணுவத்தினரும் அதிரடிப்படையினரும் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்து அனைவரையும் நிம்மதியாக மூச்சு விட வைத்திருக்கும் சூழலில், தற்பொழுது அனைவரின் கவனமும் இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்களை குறித்து அறிந்து கொள்வதில் நிலை கொண்டுள்ளது.

 

முதலில் சிமியின் மற்றொரு பதிப்பான டெக்கான் முஹாஜிதீன் என்ற புதிய தீவிரவாத அமைப்பு தான் இத்தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியிலும் செயல்பட்டுள்ளது என எப்பொழுதும் போல் மேல்மட்டத்தில் ஹிந்த்துவாவின் ஆக்டோபஸ் கரங்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள பத்திரிக்கைகளால் வெளியிடப்பட்ட மின்மடலை நம்பி அலறிய இந்திய உளவுத்துறை பின்னர் படிப்படியாக, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ, லஷ்கரே தொய்பா, அல் காயிதா என ஊகங்களை வாரி வீசி வருகிறது.

 

இந்நிலையில் இத்தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் சம்பவ இடத்தில் நேரில் இருந்து அனைத்தையும் கவனித்த பிரபல பத்திரிக்கையாளரும் மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான டாக்டர். அமரீஷ் மிஸ்ரா, அமிழ்ந்துக் கிடக்கும் உண்மைகளின் முடிச்சுகளை அவரது ஆழ்ந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயல்கிறார். இந்திய உளவுத்துறையும் அரசும் வெறுமனே யூகங்களையும் பொய்ப் பிரச்சாரங்களையும் நம்பி எப்பொழுதும் போல் உண்மையான குற்றவாளிகளைக் கோட்டைவிடுவதை விடுத்து, நேர்மையாக இச்சந்தேகங்களின் பாலும் தனது கவனத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது நடுநிலையாளர்களின் விருப்பமாகும்.

 

இரண்டாயிரம் பக்கங்களையும் இரண்டு பாகங்களைக் கொண்ட டாக்டர். அமரீஷ் மிஸ்ரா அவர்களின் சமீபத்திய நூலான "War of Civilizations: India AD 1857கடந்த மார்ச் 2008 இல் இந்திய துணை குடியரசுத் துணைத் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

டாக்டர். அம்ரீஷ் மிஸ்ராதிரு. அமரீஷ் மிஸ்ரா அவர்களின் சொற்களிலிருந்து....

 

அதிகாலை நான்கு மணியாகி விட்டிருந்தது. மும்பையிலிருந்து செய்திகளைத் தொகுத்துக் கொண்டுள்ளேன்.

 

கண்களை மூடி சிறிது நேரம் ஓய்வெடுக்க முடியவில்லை. மும்பை பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிக்கியுள்ளது.

 

எவர்கள் மஹாத்மா காந்தியைக் கொன்றார்களோ, எவர்கள் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கினார்களோ அவர்களே 16 க்கும் மேற்பட்ட குழுக்களாக மும்பையின் தாஜ், ஓபராய் மற்றும் பல்வேறு உயர்தர ஹோட்டல்களை தன் வசப்படுத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முதல் முறையாக "எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் குற்றம் சாட்டப்படவில்லை!"

 

இந்தத் தாக்குதலில் மும்பை ATS துறையில் தலைமை அதிகாரி ஹேமந்த் கர்கரேவும் அதில் சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளும் குறி வைத்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

ஏன் இவர்கள் கொல்லப்பட வேண்டும்? காரணம் இருக்கிறது.

 

அப்போது வில்லன்.. இப்போது ஹீரோ-சங் பரிவாரின் 'நாடகம்'

 

துணிச்சலின் மறுபெயர் கார்கரே
மும்பை: தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார். 

மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் ஹேமந்தை வில்லனாக சித்தரித்த நரேந்திர மோடி இப்போது அவர் பலியான பின் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு முதலைக் கண்ணீர் விட்டு வருகிறார். 

கர்கரே தான் மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் ஆகியோர்கைதாகக் காரணமாக இருந்தார். 

இதையடுத்து இவரை வில்லன் போல சித்தரித்தன பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்றவை. குறிப்பாக அத்வானியும் மோடியும்.

 

 

இந் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த அவரது பெயரைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கும் வேலையை பாஜக செய்தது. மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார். 

ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். 

அதே போல தீவிரவாதிகளுடன் சண்டை நடந்து கொண்டிருந்தபோது பாஜக தலைவர் அத்வானி தாஜ் ஹோட்டலுக்கு அருகே வந்து பேட்டி தந்து ராணுவம் என்எஸ்ஜியை எரிச்சலாக்கியதைப் போல, நரேந்திர மோடி தாக்குதல் நடந்து கொண்டிருந்த ஓபராய் ஹோட்டலுக்கு அருகே வந்தையும் ராணுவமும் போலீசாரும் ரசிக்கவில்லை. 

அதிகாரிக்கு ஹேமந்த் ரகசிய கடிதம்: 

இதற்கிடையே இந்த தாக்குதலில் தான் உயிரிழக்கவும் நேரலாம் என்பதை ஹேமந்த் முன்பே அறிந்திருந்தாரோ என்னவோ தனது முக்கிய அதிகாரிக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார். 

தீவிரவாத எதிர்ப்புப் படையில் உள்ள ராகுல் கோவர்தனுக்கு அவர் அனுப்பிய ரகசிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை கோவர்தன் விளக்க மறுத்துவிட்டார். 

மலேகாவ்ன் விசாரணை தொடர்பான சில முக்கிய விவரங்கள் அதில் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது. 

தீவிரவாதிகளுக்கு எதிராக தாஜ் ஹோட்டலில் தாக்குதலுக்குக் கிளம்பும் முன் இந்தத் கடிதத்தை கோவர்தனுக்கு அனுப்பிவிட்டு அதை அவருக்கு போனிலும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த். 

சங் பரிவார்-கவலை தெரிவித்த ஹேமந்த்: 

இதற்கிடையே முன்னாள் மும்பை போலீஸ் கமிஷ்னர் ரோட்ரிகஸ் கூறுகையில், ஹேமந்த் மறைந்ததின் மூலம் மும்பை போலீசாருக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் தன்னை சங் பரிவார் தவறாக சித்தரிப்பது குறித்து 5 நாட்களுக்கு முன் என்னை சந்தித்து வருத்தப்பட்டார். அதே நேரத்தில் தான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார். 

மிக நேர்மையான அதிகாரி, இக்கட்டான கால கடத்தில் அவரை இழந்திருக்கிறோம் என்றார்.

 

நன்றி: தட்ஸ் தமிழ்

மாலேகான் வெடிகுண்டு வழக்கின் பின்னணியின் மூளையாக உள்ள பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங்தள்-வி.ஹெச்.பி ஆகியோரின் கூட்டுச் சதியில் தொடர்புடைய பிரக்யா சிங், இராணுவ உயர் அதிகாரி புரோஹித் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுக் கொண்டும் விசாரணைகள் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டுக் கொண்டும் வரும் நேரமிது.

 

இவர்கள் அத்தனை பேரையும் கைது செய்தவர் போலீஸ் உயர் அதிகாரி கார்கரே!

 

இவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் கார்கரேவின் மேலதிகாரிகள் உட்பல பல பேரின் அச்சுறுத்தலுக்கு ஆளானார் கார்கரே! எல்.கே அத்வானி மற்றும் பிஜேபி தலைவர்கள் உட்பட பல அரசியல்வாதிகள் இவரது தலைக்கு குறிவைத்தனர்.

 

மும்பையில் நிகழ்ந்த இந்த பயங்கரவாதத்தின் முதல் பலி - கார்கரே தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

 

மும்பையில் உள்ள யூதர்களின் ஒரே கட்டிடமான நரிமன் ஹவுஸில் இந்த கொடூரமான நிகழ்வு முதன் முதலில் நடந்தது. நரிமன் பகுதியில் வாழும் குஜராத்தி ஹிந்துக்கள் பலர் நரிமன் ஹவுஸில் நடந்த படுகொலையே முதன் முதலாக மும்பையில் நடந்த நிகழ்வு என்று கூறுவதை பல்வேறு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே யூதர்களின் குடியிருப்பான இந்த நரிமன் ஹவுஸில் சந்தேகத்திற்கிடமான பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளதாக அவ்வப்போது கூறியுள்ளனர். ஆனால், அதனை ஒட்டிய எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

விளைவு? எண்ணிப்பார்க்க இயலா பயங்கரம் நடந்தே விட்டது.

 

ஆம்! இஸ்ரேலின் உளவு நிறுவனமான "மொஸாத்" இந்த ஒட்டுமொத்த பயங்கரவாதச் செயலுக்குக் காரணம் என்பது தெளிவாகி விட்டது. மும்பையில் நிகழ்ந்து வரும் இந்தத் தாக்குதலுக்கு மொஸாத்தும் அதன் கூலியாட்களும் இதன் பின்னணியில் உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

 

உலகமே அதிர்ந்து நின்று நேரலை நிகழ்ச்சியில் வேடிக்கை பார்த்து வரும் இத்தனை பெரிய பயங்கரவாதத்தைத் திட்டமிடவும் நிகழ்த்திக் காட்டவும் சாதாரண தீவிரவாத அமைப்புகளால் முடியாது.

 

அதே வேளையில் இத்தகைய பெரிய பயங்கரவாதத்தை இந்தியாவின் மதவாத சக்தியின் துணையில்லாமலும் நடத்த முடியாது. இந்த பயங்கரவாதத்திற்குக் காரணமான...

 

பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங்தள்-வி.ஹெச்.பி ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட வேண்டும்.

 

அத்வானி மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட வேண்டும்.

 

முன்னெச்சரிக்கையில்லா கையாலாகா சிவராஜ் பாட்டில் பதவி விலக வேண்டும்.

 

இந்திய நாட்டில் இது ஒரு கறுப்பு நாட்கள். இது இந்தியர்களுக்கும் இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்களுக்கும் வெட்கக் கேடான நாட்கள். முஸ்லிம்களும் நடுநிலை ஹிந்துக்களும் இது நாள் வரை கூறி வந்த கூற்றுக்கள் உண்மை என்று மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.

 

ஆர்.எஸ்.எஸ்ஸுடம் கூட்டுச் சேர்ந்து இஸ்ரேல் இந்தியாவை நிலை குலைய மட்டுமில்லை, முற்றிலுமாக அழித்தொழிக்க திட்டமிட்டுள்ளன. இஸ்ரேலுடனான உறவை இந்தியா உடனடியாக அறுத்தொழிக்க வேண்டும்.

 

வீரத் தியாகி கார்கரேவிற்கும் அவருடன் துணிச்சலாக ஹிந்துத்துவ பயங்கரத்தை உலகிற்கு வெளிப்படுத்திய அவரது ATS குழுவிற்கும் இந்தியர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

 

உருது டைம்ஸ் இதழில் வெளியான புகைப்படத்தில் மொஸாத் மற்றும் எக்ஸ் மொஸாத் நபர்கள் இந்தியாவிற்கு வந்ததும் ஹிந்துத்துவா சாதுக்கள் பலரைச் சந்தித்து திட்டமிட்டதும் வெளியாகியுள்ளது. மிகப் பெரிய சதித்திட்டம் வீதிக்கு வந்துள்ளது.

 

இது உணர்ச்சி வசப்பட வேண்டிய நேரம் அல்ல. ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம், முக்கியமாக இந்தியாவிலுள்ள ஹிந்துக்களாகிய நாம்! காந்தியைக் கொன்ற கயவர்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளனர்.

 

தூய சனாதானக் கொள்கையைப் பின்பற்றக் கூடிய இந்துக்களாகிய நாம், தேசத்தின் மீது தூய பற்றுக் கொண்டவர்களாக உள்ளோம்.  இங்கே ஹிந்துத்துவாக்கள் செய்து கொண்டிருப்பது தேச விரோத செயல் என்பதை தாய் நாட்டை நேசிக்கும் நாம் முழுமையாகப் புரிந்து அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். பிரக்யா சிங், அத்வானி போன்ற முழு நேர தேச விரோதிகளை இனம் காண வேண்டும். இவர்கள் அழிக்கப் பட வேண்டியவர்கள். ஹிந்துக்களில் இவர்கள் சார்பாக சிந்திப்பவர்கள், அதன் மூலம் விளையும் பாதகங்களை எண்ணிப் பார்க்கவேண்டும்.

 

இது ஒரு தேசியம் சார்ந்த கேள்வி!

 

நாட்டை சுடுகாடாக்கும் மதவெறிபிடித்த ஹிந்துத்துவாவுடன் இந்துக்கள் போரிட வேண்டும். தேவைப்பட்டால் இந்த இஸ்ரேலுடன் கை கோர்த்து நாட்டை நிர்மூலமாக்கும் இந்த நாச சக்திகளுடன் இந்துக்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் உள்நாட்டுப்போர் கூட நிகழ்த்தத் தயாராக வேண்டும்.

 அமரேஷ் மிஸ்ரா(+91-9250305699)

நன்றி:சத்தியமார்க்கம்.காம்

Read more...

ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தவை!

>> ஞாயிறு, 23 நவம்பர், 2008

ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தவை!
எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப் on Wednesday, November 12th, 2008
எங்கேனும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்தால் சற்றும் யோசிக்காமல் முஸ்லிம் தீவிரவாதி இஸ்லாமியத் தீவிரவாதம் என்று செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க ஊடகங்கள் தயங்குவதில்லை. மாலேகானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு சங் பரிவார் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டமை இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒட்டுத் தாடிகளுடன் இஸ்லாமிய வேடமிட்டு குண்டு வெடிப்பு நடத்தி முஸ்லிம்களைக் குற்றவாளிகளாக்க முயன்றவர்களின் சதியை வல்ல இறைவன் அம்பலப் படுத்திவிட்டான்! ஆனால் வழக்கமாக ஊடகங்களின் பார்வையில் இது ஒரு செய்தியாகப் படவில்லை.

டெல்லி குண்டு வெடிப்பில் பக்கம் பக்கமாக எழுதி இஸ்லாமைத் தூற்றிய இந்தியா டுடே ஆகட்டும், பள்ளிவாசலில் குண்டு வெடித்தால் பள்ளி வாசலில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது என்று செய்தியைத் திரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாசிசப் பத்திரிக்கை தினமலராகட்டும், எதுவுமே இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ள மாலேகான் குண்டு வெடிப்பு பற்றிய செய்திகளில் அவ்வளவு அக்கரை காட்டவில்லை. காரணம் வெளிப்பட்டிருப்பது மறைக்கப்பட்டிருந்த அவர்களின் கோர முகங்கள்!

குண்டு வெடிப்பில் அதிகம் பேர் கொல்லப்படவில்லை என்பதற்காகக் கவலை கொள்ளும் பெண் (சாத்தவி?) பயங்கரவாதி பரக்யாசிங் தாக்கூராகட்டும், அவளுக்கு சுக்கான் பிடிக்கும் பா.ஜ.க, விஸ்வ இந்து பரிசத் இந்துத் துவ வாதிகளாகட்டும், அப்பாவிகளைக் கொல்லக் கூடாது என்ற எந்த இங்கிதமும் இவர்களுக்குக் கிடையாது. இதனால் தான் கைதானவர்கள் விடுதலையாக சங்பரிவார் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் ஊடகங்கள் தீவிரவாதத்துக்கு எதிரான ஒழுக்கப் பயிற்சிகளும், பொதுக் கூட்டங்களும், மாநாடுகளும், கருத்தரங்கங்களும் அதிக அளவில் நடத்துவது முஸ்pலம்கள் தான் என்பதை மறந்து விடுகின்றன. இஸ்லாமிய அறிஞர்களின் தலைமையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகளில் ஏராளமான இளைஞர்கள் பங்கு பெற்று ஒழுக்கமுள்ள சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் ஒரு பக்கம் வளர்ந்து வரும்போது இன்னொரு பக்கம் சங்பரிவார் தன் தொண்டர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், வெடிகுண்டு வைக்கும் பயிற்சியும் அளித்து வருகிறது. இவை அத்தனையும் ராணுவத்தின் உதவியுடன் நடைபெறுகிறது. ராணுவத்தில் உயர் பதவி வகிப்பவர்கள் கூட இவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் அளவுக்கு இந்திய ராணுவத்தில் பயங்கரவாத நோய் பீடித்துள்ளது.

இப்போது இந்த குண்டு வெடிப்புடன் தொடர்புடைய ராணுவத்தில் இன்டலிஜன்ஸ் பிரிவில் பணியாற்றிய லெஃப்டினெண்ட் கேணல் பிரசாத் புரோகித் என்பர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கஷ்மீரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ராணுவத்தின் நிதியிலிருந்து ரகசியமாக பணத்தை தீவிரவாத இயக்கங்களுக்கு மாற்றியுள்ளார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகிய ஸமீர் குல்கர்னி என்பவன் பல முறை கஷ்மீரில் வைத்து இவரை சந்தித்ததும் வெளிப்பட்டுள்ளது. (செய்தி: மாத்யமம்)

சங்கப் பரிவார் திட்ட மிட்டு தன் தொண்டர்களை ராணுவத்தில் சேர ஊக்குவித்து வருகிறது. கஷ்மீரில் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மிகப்பெரிய ராணுவ அதிகாரிகளின் உதவியுடன் சங்பரிவார் தீவிரவாதிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க இத்தகைய சம்பவங்களைக் காரணம் காட்டி முஸ்லிம் இளைஞர்களை காவல் துறை வேட்டையாடி வருகிறது. முஸ்லிம் இளைஞர்களை பிடித்துச் சென்று பின்னர் சுட்டுக் கொலை செய்து விட்டு என்கவுண்டர் என்று திருப்பி விடுகிறது. பத்திரிக்கைகளும் முஸ்லிம் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை என்று தலைப்புச் செய்திகள் வெளியிடுகிறது. ஜாமிஆ நகரில் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் படித்துக் கொண்டிருக்கும் அப்பாவி மாணவர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இது போன்று இன்னொரு சம்பவத்தை நிறைவேற்ற மாறு வேடத்தில் காரில் வந்து இளைஞர்களைக் கடத்திச் செல்ல முற்பட்ட போலீஸ் அதிகாரி டெல்லியில் பிடிபட்டுள்ளார். இப்படிப் பட்ட போலி என்கவுண்டர்கள் ஏராளம். இவ்வாறு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் முஸ்லிம்கள் குற்றமற்றவர்கள் என்று நிருபணமானால் மட்டும் செய்திகளை தந்திரமாக இருட்டடிப்பு செய்து விடுகின்றன.
அவ்வாறு இருட்டடிப்புச் செய்யப்பட்ட உரு செய்திதான் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் கடந்த வருடம் நடந்த குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்ட சம்பவம்.

இவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் குற்றத்தை நிரூபிப்பதில் அரசு வழக்குரைஞர் தோல்வியடைந்து விட்டதாக நீதி மன்றம் கூறுகிறது. இவர்களுக்கு இழப்பீடாக உதவித் தொகைகளும் ஆட்டோ வும் அரசாங்கம் வழங்குவதாக உறுதி செய்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட ஒருவரை அரக்கத் தனமாக சித்திர வதை செய்து, குண்டு வைத்ததாக ஒப்புக் கொள்ளவில்லையெனில் என்கவுண்டர் நடத்தி விடுவதாக காவல் துறை மிரட்டியதை விடுதலையான இம்ரான் என்ற இளைஞர் கூறுகிறார். (நன்றி: சத்திய மார்க்கம்.காம்)

ஆக ராணுவம் முதற் கொண்டு காவல் துறை வரை கொடிய எண்ணமுடையவர்கள் செயல்பட்டுக் கொண்டிரு ப்பது இதன் மூலம தெரிய வருகிறது.

இதற்கிடையில் மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் தான் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பையும் நடத்தியிருக்கக் கூடும் என்று இவ்வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து இப்போது விசாரணை மேற்கொள்ளப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறைக்கப்பட்ட இந்து பயங்கரவாதத்தின் கோர முகம் இதிலிருந்து வெளிப்பட்டுள்ளது. எனினும் ஊடகங்கள் இதிலும் ஒரு சார்பு நிலையைத் தான் கடைபிடித்து வருகிறது. முஸ்லிம் சமுதாயம் தனக்கென ஒரு உறுதியான செய்திஊடகத்தை உருவாக்குவதன் அவசியத்தை இது உணர்த்துகிறது.                                                                                                                                                                                           
நன்றி: இஸ்லாம்கல்வி.காம்

Read more...

இஸ்லாமுக்கு மாறினார் மைக்கேல் ஜாக்சன்

>> சனி, 22 நவம்பர், 2008

இஸ்லாமுக்கு மாறினார் மைக்கேல் ஜாக்சன்-பஹ்ரைனில் செட்டிலாகிறார்
வெள்ளிக்கிழமை, நவம்பர் 21, 2008, 18:8

லாஸ் ஏஞ்செலஸ்: பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டார். தனது பெயரையும் மிகயீல் எனவும் அவர் மாற்றி விட்டார். 

பனோராமா என்ற இதழின் இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தான் இஸ்லாமின் ஐந்து கடமைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், பெயரை மிகயீல் என மாற்றிக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக தனது மத மாற்றத்தை அறிவிப்பேன் எனவும் ஜாக்சன் இந்த இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். 

பஹ்ரைனில் செட்டில் ஆகிறார்: 

மேலம் விரைவில் பஹ்ரைனுக்குப் போய் ஜாக்சன் செட்டிலாகப் போவதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே அவர் செயற்கைத் தீவு ஒன்றில் இடம் வாங்கிப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மத மாற்றம் குறித்து நெருக்கமானவர்களிடம் ஜாக்சன் பேசுகையில், எனது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு சரியான மதமாக இஸ்லாம் உள்ளது. யூதர்கள் எல்லாம் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் எனக் கூறினாராம் ஜாக்சன்.


தொடர்ந்து ஜாக்சன் கூறுகையில், இந்த அட்டைப் பூச்சிகளால் நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். யூதர்கள் எல்லாம் நிறைய சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரிய வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள், கார்கள், வசதிகள் என சந்தோஷமாக இருக்கிறார்கள். இதெல்லாம் அவர்களின் சதி செயலால் கிடைப்பவை. 

விரைவில் எனது ஸ்டுடியோவையும், சொத்துக்களையும் அமெரிக்காவிலிருந்து பஹ்ரைனுக்கு மாற்றிக் கொள்ளப் போகிறேன். அமெரிக்காவில் இதுவரை எனக்குக் கிடைக்காத சுதந்திரம் பஹ்ரைனில் கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜாக்சன். 

சமீபத்தில் லாஸ் ஏஞ்செலஸில் உள்ள தனது நண்பரின் வீட்டில், குரான் முன்பு தான் இஸ்லாமில் நம்பி்ககை வைத்துள்ளதாக சத்தியம் செய்தாராம் ஜாக்சன். அங்குதான் அவர் முறைப்படி இஸ்லாமியராகவும் மாறினார் என்று கூறப்படுகிறது. 

எளிமையாக நடந்த அந்த நிகழ்ச்சியில் ஒரு இமாம் கலந்து கொண்டுள்ளார். தரையில்,விரிக்கப்பட்டிருந்த துணியில், தலையில் தொப்பியோடு ஜாக்சன் அமர்ந்திருக்க, அவருக்கு இஸ்லாம் மத மார்க்கப்படி மத மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஷேக் போட்ட வழக்கு: 

இதற்கிடையே, பஹ்ரைன் இளவரசர் அப்துல்லா அல் கலீபா ஜாக்சன் மீது லண்டன் கோர்ட்டில் தொடர்ந்துள்ள ஒரு வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. அதில் ஜாக்சன் ஆஜராக வேண்டும். இந்த நிலையில் அவரது மத மாற்ற செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் அவர் பஹ்ரைனில் குடியேறப் போவதாகவம் அந்த செய்தி கூறுவது முக்கியத்துவம் வாய்ந்தது. 
ரெக்கார்டிங் காண்டிராக்டை ஜாக்சன் மீறியதாக பஹ்ரைன் இளவரசர் லண்டன் கோர்ட்டில் வழக்கு

 
தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



 


நன்றி: தட்ஸ்தமிழ்.காம்


Read more...

அமீரகத்தில் சங்பரிவாரின் ஊடுருவலா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக சக்தி என்ற பெயரில் பண்பலை தொடங்கப்பட்டது. சமீப காலமாக அதன் செய்திகளில் கூறப்ப்டும் வார்த்தைகளில் இருந்து அதிலும் சங்பரிவாரத்தின் ஊடுருவல் இருக்குமோ? என்ற சந்தேகம் தமிழ் பேசும் மக்களிடையே எழுந்திருக்கிறது. உதாரணத்திற்க்கு தற்ப்போது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் மாலேகான் குண்டு வெடிப்பில் பெண் சன்னியசினி பிரக்யா சிங், இராணுவத்தில் முக்கிய பங்கு வகித்த கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோருடைய தொடர்பை ப்ற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதை அமீரகதில் உள்ள மழையால மொழி வானொலிகளாம் ஆசியா நெட், ரேடியோ ஆசியா மற்றும் இந்தி மொழி அலவரிசை செய்திகளில் உண்மையை சொல்லி கொண்டிருக்கும் நிலையில் இதை பற்றி தமிழ் சக்தி ரேடியோ அலைவரிசை வாயை திறக்காததின் மர்மம் என்ன? ஆனால் இந்தினேசியாவில் நடந்த ஒரு குண்டு வெடிப்பை பற்றி கூறும் போது மட்டும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என குறிப்பிடுகின்றது பாரபட்சம் இல்லாமல் முக்கிய செய்திகளை தருவதுதான் செய்தி தர்மம். அதை விடுத்து மத துவேசத்தை வளர்க்கும் வகையில் அதுவும் சகோதரத்துவத்தை பேணும் தமிழ் மக்களிடயேன செய்திகளை தரும் சக்தி வானொலி தன்னை திருத்திக்கொள்ள முன் வருமா? அல்லது சகோதரத்துவத்தை விரும்பும் சகொதரர்கள் முயற்ச்சி மூலமாக தனக்கு மூடு விழா நடத்திக்கொள்ளும் சூழக்கு தன்னை தள்ளிக் கொள்ளுமா? காலம்தான் பதில் சொல்லும்

Read more...

மரணத்திற்க்கு பின் (பாகம்-2)

>> சனி, 26 ஜனவரி, 2008

Read more...

மரணத்திற்க்கு பின் (பாகம்-1)

>> வெள்ளி, 25 ஜனவரி, 2008

Read more...

அபுதாபியில் நடைபெற்ற கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா!

சத்திய மார்க்கத்தை பிறமக்களும் அறிந்து கொள்ள ஓர் வாய்ப்பாக அமைய வேண்டும் என்பதற்காக முஸ்லிம் அல்லாத மக்கள் மட்டும் பங்கேற்க்கும் 'கட்டுரை போட்டி' யினை தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அபுதாபி கிளை கடந்த 4 வருடங்களாக நடத்தி வருகிறது. அதனடிப்படையில் இந்த ஆண்டு (2007) 'இன்றை நவீன உலகில் இஸ்லாம்' எனும் தலைப்பினை அறிவிப்பு செய்து அழைப்பு விடுத்தது.
இக்கட்டுரைப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராக அபுதாபி மண்டல தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆலோசகர் சகோ. ஃபஜ்லுல்லாஹ் அவர்கள் செயல்பட்டார்கள். இதனை தொடர்ந்து பல்வேறு முஸ்லிமல்லாத அன்பர்களிடமிருந்து பல கட்டுரைகள் வந்து சேர்ந்தன. இக்கட்டுரைகளிலிருந்து சிறந்த கட்டுரைகளை தேர்ந்து எடுத்து, அவற்றிற்கு பரிசுகளும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்காக ஓர் பரிசளிப்பு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அவ்விழாவுடன் இஸ்லாம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியினையும் (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்தது.
கடந்த 28-12-2007 அன்று அபுதாபி நஜ்தா ரோட்டில் அமைந்திருக்கும் ஏர்லைன்ஸ் ரெஸ்டாரன்ட் ஹாலில் வைத்து இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சகோ. முஹம்மது ஷேக் அவர்கள் தலைமை தாங்கினார்.
கட்டுரை போட்டியில் பங்குபெற்ற கட்டுரைகள் குறித்த நிறைகள், அதில் எழுப்பட்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் போன்றவைகளை தொகுத்து முன்னுரை வழங்கப்பட்டது. இம்முன்னுரையினை அபுதாபி மண்டல தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆலோசகர் சகோ. யுசுப் அலி அவர்கள் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து பரிசளிப்பு நடைபெற்றது. முஸ்லிம் அல்லாத அன்பர்கள் மட்டும் கலந்து கொண்ட 'இன்றை நவீன உலகில் இஸ்லாம்' கட்டுரைப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் மூன்று பரிசுகளை வென்றவர்கள் விபரம்:
1. முதல் பரிசு : சகோதரி. ஸ்ரீ தேவி முத்துக்குமரன்
2. இரண்டாவது பரிசு: சகோதரர்: ரமேஷ் கண்ணன்
3. மூன்றாவது பரிசு: சகோதரர்: துரை
பரிசளிப்பினை தொடர்ந்து 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' எனும் தலைப்பில் அமீரக TNTJ ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் இஸ்லாம் குறித்த அறிமுக உரையினை நிகழ்த்தினார்கள். அறிமுக உரையினை தொடர்ந்து இஸ்லாம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முஸ்லிமல்லாத சகோதரர்களின் ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கு சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் பதிலளித்தார்கள்.


இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிற மத சகேதரர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த அரிய பல உண்மைகளை தெரிந்து கொண்டனர். அல்ஹம்துலிலல்லாஹ். அபுதாபி மண்டல தவ்ஹீத் ஜமாஅத் துணைதலைவர் சகோ. ஷேக் முஹம்மது அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.


இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அபுதாபி மண்டல பொருளாளர் சகோ. சுல்தான் சலாஹுதீன் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக செய்திருந்தனர். முஸாஃபா பகுதியிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகளை முஸாஃபா கிளை தலைவர் அப்துல்லாஹ் தலைமையில் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கடந்த மூன்று வருட முதல் பரிசு கட்டுரைகளின் தொகுப்பு, சகோ. பி.ஜெ அவர்கள் உரையாற்றிய 'உலக அதிசயம் எது' CD மற்றும் 'அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்' புத்தகம் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே!!!!

Read more...

நடந்து வந்த பாதை

நடந்து வந்த பாதைகளில் பூக்கள் இல்லைமுட் படுக்கைதான் இருந்தது!கடந்து வந்த நாட்கள் எல்லாம் தென்றல் வீசவில்லை வாடை காற்றுகளே!துரத்துகின்ற துரோகங்கள்! விரட்டுகின்ற ஏமாற்றங்கள்!ஒதுங்கிவிட்ட நட்புகள்!விலகிவிட்ட உறவுகள்!இருந்த போதிலும்!!!இரும்பினால் செய்யப்பட்ட பாதங்களும் நரம்பினால் பின்னப்பட்ட நம்பிக்கைகளும்என்னுடன் இருக்கும் வரை தோல்வி என்னை தொடுவதாகவும் இல்லைவெற்றி என்னை விடுவதாகவும் இல்லை.(இறைவன் நாடினால்)

Read more...

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP